ஆப்நகரம்

ஆந்திராவில் கரையை கடந்தது பெதாய் புயல்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா - ஏனாம் இடையே பெதாய் புயல் கரையைக் கடந்துள்ளது.

Samayam Tamil 17 Dec 2018, 3:20 pm
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில்நிலவி வரும் பெதாய் புயல் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்தது. இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா - ஏனாம் இடையே பெதாய் புயல் கரையைக் கடந்துள்ளது.
Samayam Tamil edd


கரையை கடந்தபோது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. காக்கிநாடா மற்றும் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் இன்னும் 24 மணி நேரம் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

பெதாய் புயல் இன்று கரையை கடப்பதை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேயில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக வழக்கமான அளவை விட வெப்பம் 4 சதவீதம் குறைவாகவே உள்ளது எனவும் கூறியிருக்கிறது.

அடுத்த செய்தி