வாயு புயல் திசை மாறினாலும், குஜராத் மாநிலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவான வாயு புயல் தீவிரமடைந்து, நேற்று பிற்பகல் குஜராத் மாநிலத்தின் செளராஷ்டிரா கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை கருதி, கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
குஜராத் முழுவதும் நேற்று 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. போர்பந்தர், டையூ, பாவ்நகர், கேசாத், கண்ட்லா விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் 400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனிடையே, வாயு புயல் நேற்று திடீரென்று திசை மாறி ஓமன் நோக்கி நகர்ந்து வருகிறது. இருப்பினும் புயலின் தாக்கத்தால், செளராஷ்டிரா கடற்கரை, கிர் சோம்நாத், டையூ, ஜுனாகர், போர்பந்தர், தேவபூமி துவாரகை ஆகிய கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
பலத்த சூறாவளி காற்றும் வீசி வருவதால் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிகமான கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. எனவே வரும் 15-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் திசை மாறினாலும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர். வாயு புயல் அதிதீவிர புயலாக குஜராத் மாநிலத்தை தாக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், புயல் திசை மாறியதால், குஜராத் மாநிலம் தப்பியது. இதனால் மாநில மக்கள் நிம்மதியடைந்து உள்ளனர்.
அரபிக் கடலில் உருவான வாயு புயல் தீவிரமடைந்து, நேற்று பிற்பகல் குஜராத் மாநிலத்தின் செளராஷ்டிரா கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை கருதி, கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
குஜராத் முழுவதும் நேற்று 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. போர்பந்தர், டையூ, பாவ்நகர், கேசாத், கண்ட்லா விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் 400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனிடையே, வாயு புயல் நேற்று திடீரென்று திசை மாறி ஓமன் நோக்கி நகர்ந்து வருகிறது. இருப்பினும் புயலின் தாக்கத்தால், செளராஷ்டிரா கடற்கரை, கிர் சோம்நாத், டையூ, ஜுனாகர், போர்பந்தர், தேவபூமி துவாரகை ஆகிய கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
பலத்த சூறாவளி காற்றும் வீசி வருவதால் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிகமான கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. எனவே வரும் 15-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் திசை மாறினாலும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர். வாயு புயல் அதிதீவிர புயலாக குஜராத் மாநிலத்தை தாக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், புயல் திசை மாறியதால், குஜராத் மாநிலம் தப்பியது. இதனால் மாநில மக்கள் நிம்மதியடைந்து உள்ளனர்.