ஆப்நகரம்

அதி தீவிர புயல் யாஸ் இன்று மதியம் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

யாஸ் புயல் இன்று நண்பகல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 May 2021, 7:05 am
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த யாஸ் புயல் மேலும் வலுவடைந்து திங்கள்கிழமை (மே 24) நள்ளிரவு தீவிரப் புயலாக மாறியது.
Samayam Tamil Cyclone Yaas


இந்த தீவிரப் புயல் மேலும் வலுவடைந்து, அதிதீவிரப் புயலமாக மாறி, ஒடிஸா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகா்தீவுகள் இடையே தாம்ரா துறைமுகம் அருகே இன்று (மே 26) நண்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த ஸ்டாலினுக்கு இபிஎஸ் செம ஐடியா!
இன்று அதிகாலை நிலவரப்படி, ஓடிசா மாநிலம் பாரதீப்க்கு வடகிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவிலும், பாலசோருக்கு தென் கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவிலும் மேற்குவங்க மாநிலம் திகாவுக்கு தென் கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த தீவிர புயல் பாரதீப்-சாகா்தீவுகள் இடையே தாம்ரா துறைமுகம் அருகே இன்று (மே 26) நண்பகலில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா: மூன்று மாதத்தில் அதிசயம் நடக்குமாம் - காத்திருக்கும் அமமுகவினர்!

புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிஸா, மேற்குவங்க கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்றும், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த இரு மாநிலங்களில் மட்டும் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி