ஆப்நகரம்

மகாராஷ்டிராவில் உறியடிக்கும் போட்டி: 2 பேர் பலி: 117 பேர் படுகாயம்

மகராஷ்டிராவில் நடந்த உறியடிக்கும் போட்டியில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 117 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

TNN 16 Aug 2017, 10:05 am
மகராஷ்டிராவில் நடந்த உறியடிக்கும் போட்டியில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 117 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil dahi handi 2 govindas die 117 injured in maharashtra
மகாராஷ்டிராவில் உறியடிக்கும் போட்டி: 2 பேர் பலி: 117 பேர் படுகாயம்


மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கள் கிழமை ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து, மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் உறியடிக்கும் (தஹி ஹண்டி) போட்டி நடத்தப்பட்டது. இதற்கான முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். அதில், பால்கர் பகுதியைச் சேர்ந்த ரோஹன் கினி (21) என்பவரும் ஒருவர். அவருக்கு திடிரென்று வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.



ஆனால், மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதே போல், ஐரோலி பகுதியில் நடந்த ஜென்மாஷ்டமி விழாவில் மின்சாரம் தாக்கி ஜெயஷ் சார்லே (34) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், மும்பையில் நடந்த உறியடி விழாவின் போதும் 117 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A 21-year-old 'govinda' died after suffering epileptic attack during the Dahi Handi celebrations on Tuesday in Palghar, while in Airoli, a 34-year-old died of electrocution while forming a human pyramid as part of the festival. In Mumbai, as many as 117 'govindas' suffered injuries during the celebrations.

அடுத்த செய்தி