ஆப்நகரம்

மீண்டும் பெரும் ஆபத்து, கைமீறும் நிலைமை; கண்டுகொள்ளுமா மாநில அரசு?

மருத்துவமனைகளில் தினசரி அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Jul 2021, 2:30 pm

ஹைலைட்ஸ்:

  • கொரோனா பாதிப்புகள் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றன
  • மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்கள் தினசரி அதிகரிப்பு
  • மக்களும், அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Covid Cases in AP
ஆந்திர மாநிலத்தில் கடந்த மே இரண்டாவது வாரம் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டது. இதையடுத்து தினசரி புதிய பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்தன. கடந்த சில வாரங்களாக புதிய பாதிப்புகள் 3 ஆயிரம் என்ற அளவிற்கு சரிந்துள்ளன. குறிப்பாக கடந்த 45 நாட்களில் கொரோனா பாசிடிவ் விகிதம், ஆக்சிஜன் விநியோகம், R நம்பர், படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றின் நிலை முன்னேற்றம் கண்டு வருகின்றன. ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட் நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மீண்டும் இப்படியொரு ஆபத்து

கடந்த ஜூலை 2ஆம் தேதி புதிதாக 89 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதுவே ஜூலை 15ஆம் தேதி 599ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ஜூலை 2ஆம் தேதி 893 பேரும், ஜூலை 15ஆம் தேதி 547 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகளின் தேவையை மீண்டும் அதிகரிக்கச் செய்துள்ளது. முதல் அலையை போல் இரண்டாவது அலையில் அவ்வளவு சீக்கிரம் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை.
ஊரடங்கு திடீர் ரத்து; தாராள தளர்வுகள் அறிவிப்பு; உச்ச நீதிமன்றம் ஷாக்!
உச்சத்தில் இருக்கும் மாவட்டங்கள்

ஏனெனில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவிட்-19 மறு உற்பத்தி விகிதம் 1.8ஆக இருந்த நிலையில், தற்போது 0.8 முதல் 0.9 சதவீதமாக காணப்படுகிறது. இதன் பின்னணி குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில் மாவட்ட வாரியான பாதிப்புகளும் அச்சமூட்டுகின்றன. அதாவது கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, சித்தூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உச்சத்தில் இருக்கின்றன.

ஆபத்தான விஷயம், கவனம் தேவை

குறிப்பாக கிழக்கு கோதாவரியில் 2.73 லட்சமும், சித்தூரில் 2.27 லட்சமும் பாதிப்புகள் காணப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தில் தடுப்பூசி பயன்பாடு முடுக்கிவிடப்பட்டுள்ள சூழலிலும், இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.

மொத்தம் 42 லட்சம் பேர் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 1.03 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மூன்றாவது அலைக்கு உரிய முறையில் தயாராக வேண்டும் என்று மருத்துவத்துறை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி