ஆப்நகரம்

தலித் மாணவர்களைத் தனியே அமரவைத்த பள்ளி... ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் புகார்

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Samayam Tamil 11 Dec 2019, 12:03 pm
மதிய உணவின் போது, தலித் சிறுவர்களைக் கட்டாயப்படுத்தித் தனியே அமரவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil saathi


ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது நானா கிராமம். இங்குள்ள பள்ளியில் மத்ய உணவின்போது தலித் மாணவர்களை வலுக்கட்டாயமாக தனி வரிசையில் அமர வைத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல, பள்ளிக்கு சென்றனர் பெற்றோர்கள்.

விசாரித்ததில், மாணவர்கள் சொன்னது உண்மை என்பது தெரிய வந்தது. விசாரிக்கப்ப போனபோது நடந்தவற்றை வீடியோ பதிவாகவும் ஆக்கிக்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

8 மாத குழந்தைக்கு 5வது மாடியில் காத்திருந்த ஆபத்து; அடுத்து நடந்த ஆச்சரியம்!

பெற்றோர்களில் ஒருவரே இந்த புகாரை எழுதி, வீடியோ ஆதாரத்துடன் புகாரைப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மண்டி மாவட்ட எஸ்.பி குருதேவ் சந்த் ஷர்மா தெரிவித்ததாவது, “ எஸ்.சி, எஸ்.டி சட்டம் 1989இன் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள், குழந்தைகள் மனதில் சாதிய எற்றத்தாழ்வை விதைக்குமென்பதை அறிந்து பள்ளிகள் செயல்பட வேண்டும்.

சாதிய ஒடுக்குமுறைகள் அற்ற சமூகத்தை உருவாக்குவதே மனிதன் என்னும் கூடிவாழும் குணம் கொண்ட சமூக விலங்கின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில் பொதுமக்கள் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கிறது.

அடுத்த செய்தி