ஆப்நகரம்

இவர்களை எதிர்த்து குரல் கொடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது: ராகுல் காட்டம்!!

''விஷம் கலந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் அரசியலை நாம் கண்டிக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ளார்.

Samayam Tamil 15 Jun 2018, 4:11 pm
''விஷம் கலந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் அரசியலை நாம் கண்டிக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ளார்.
Samayam Tamil வரலாறு நம்மை மன்னிக்காது: ராகுல் காட்டம்!!
வரலாறு நம்மை மன்னிக்காது: ராகுல் காட்டம்!!


மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவன் மாவட்டத்தில் உள்ள வாக்டி கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் அங்குள்ள ஈஸ்வர் ஜோஷி என்பவரின் பண்ணையில் உள்ள கிணற்றில் நீச்சல் அடித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவர்களின் ஆடைகளைக் கலைந்து நிர்வாண கோணத்தில் நிற்க வைத்து ஜோஷி மற்றும் அவரது நண்பர்கள் பிரம்பு மற்றும் பைப்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது பதிவில், ''உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களின் கிணற்றில் தலித் சிறுவர்கள் குளித்ததுதான் குற்றமாகியுள்ளது. இதை ஏதிர்த்து நாம் குரல் கொடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் தலித்துகளுக்கு எதிரான விஷம் கலந்த அரசியலை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி