ஆப்நகரம்

திருமண விருந்தில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலின இளைஞர் அடித்து கொலை

உத்தரகாண்ட்: திருமண விருந்தில் பங்கேற்றுவிட்டு, நாற்காலியில் அமர்ந்து உணவு சாப்பிட்ட பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை. இந்த சம்பவம் தொடர்பாக உத்தரகாண்ட் காவல்துறை விசாரணை.

Samayam Tamil 6 May 2019, 10:38 am
திருமண விருந்தின் போது மற்ற சமுதாயத்தினருக்கு இணையாக நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலின இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil நாற்காலியில் அமர்ந்த சாப்பிட்ட காரணத்தால் அடித்துக் கொல்லப்பட்ட பட்டியிலன இளைஞர்
நாற்காலியில் அமர்ந்த சாப்பிட்ட காரணத்தால் அடித்துக் கொல்லப்பட்ட பட்டியிலன இளைஞர்


உத்தரகாண்ட் மாநிலத்தில் தெஹ்ரி கார்வல் பகுதியை சேர்ந்த ஜிதேந்திர தாஸ், அப்பகுதியில் நடைபெற்ற திருமண விருந்தில் பங்கேற்றுவிட்டு நாற்காலியில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். இதை பார்த்த சிலர் ஜிதேந்திர தாஸை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்து உத்தகரகாண்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜிதேந்திர தாஸ் மரணம் தொடர்பாக அவரது உறவினர் கூறிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிதேந்திர தாஸ் பட்டியிலன வகுப்பைச் சேர்ந்தவர். திருமண விருந்தின் போது மற்ற சமுதாயத்தினருக்கு இணையாக நாற்காலியில் அமர்ந்து அவர் சாப்பிட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த குறிப்பிட்ட பிரிவினர் ஜிதேந்திராவை தாக்கி கொலை செய்துள்ளனர். என்று உறவினர் தெரிவித்தார்.

திருமண விருந்தில் தாக்கப்பட்ட தாஸ் அங்கியிருந்து தப்பித்து அன்றிரவு வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த அவர், அம்மாவிடம் சொல்லிவிட்டு வாசலில் படுத்து உறங்கியுள்ளார். காலையில் அவரது தாய் எழுந்து பார்த்த போது, சுயநினைவு இல்லாமல் தாஸ் கிடந்துள்ளார்.

அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பரிசோதனை செய்த போது, தாஸ் ஏற்கனவே இறுந்துவிட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்தே அவரது மரணம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு தெஹ்ரி கார்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி