ஆப்நகரம்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நடன பயிற்சியாளர் கைது

திருமணம் செய்துக் கொள்வதாக உறுதியளித்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நடன பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

TNN 4 Apr 2017, 12:08 pm
பெங்களூரு: திருமணம் செய்துக் கொள்வதாக உறுதியளித்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நடன பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil dance teacher arrested on charges of raping student
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நடன பயிற்சியாளர் கைது


பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் எனும் ஏரோபிக்ஸ் நடன பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நடன பறிச்சியாளரான அப்பெண் ஏரோபிக்ஸ் கற்றுக் கொள்வதற்காக கிரிஸ்டோபரின் நடன பள்ளியில் கடந்த 2014ஆம் ஆண்டு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆனால், 2017 ஆம் தொடக்கத்தில் இருந்து இளம்பெண்ணை கிறிஸ்டோபர் தவிர்த்து வந்துள்ளார். இதனையடுத்து, பாலியல் பலாத்கார குற்ற வழக்கில் கிறிஸ்டோபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

3 திருடர்கள் கைது: ரூ.4 லட்சம் பறிமுதல்

வேறு மாநிலத்தைச் சேர்ந்த திருட்டுக் கும்பலை சிறப்பு காவல்ப்படை அதிகாரிகள் கைது செய்தனர். தமிழ்நாடு, கேரள போன்ற மாநிலங்களில் உள்ள தேவாலயத்தில் இருந்து திருடிய ரூ.40 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக எர்ணாகுளத்தைச் சேர்ந்த சூர்யா(29), கண்ணூரைச் சேர்ந்த சுஜி(35), மதுரையை சேர்ந்த ஜெயபிரகாஷ்(39) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே இவர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தமிழ்நாடு மற்றும் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

A 35-year-old dance master was arrested on charges of raping a 23-year-old student after promising to marry her.

அடுத்த செய்தி