ஆப்நகரம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ரத்து!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 25 May 2020, 6:24 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருமலை திருப்பதி ஏழுமைலயான் கோயில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், சில தளர்வுகளை அளித்துள்ள மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால், திருப்பதி ஏழுமைலயான் கோயில் எப்போது பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும் என பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறுகையில், கொரோனா கஷ்ட காலம் முடிந்து ஏழுமலையான் கோவில் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி இப்போது உறுதியாக கூற இயலாது என்றார்.

முன்னதாக, வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்காததையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. எனவே, மார்ச் 13ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்த ஆர்ஜித சேவை, விரைவு தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றுக்கு செலுத்திய கட்டணத்தை அவர்களின் வங்கி கணக்குகளுக்கு தேவஸ்தானம் திருப்பி செலுத்தியது.

2 மாதத்திற்குப் பின், ரம்ஜான் அன்று திறக்கப்பட்ட காந்திபுரம் தேவாலயம்!

இந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்த சேவா தரிசனம், வாடகை அறை, விரைவு தரிசனம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து, பக்தர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதேசமயம், முழு முடக்கம் விலக்கப்பட்டால் தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி