ஆப்நகரம்

உபி.,யில் உள்ள தாஸ்னா சிறையில் உள்ள பல் மருத்துவமனைக்கு ஆருஷி பெயர் - அரசு முடிவு

பல் மருத்துவ தம்பதியர்களான ராஜேஷ் தல்வார் - நூபுர் தம்பதியரால், தாஸ்னா சிறையில் நடத்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு, அவர்களின் மகள் ஆருஷியின் பெயர் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

TNN 19 Oct 2017, 5:19 pm
பல் மருத்துவ தம்பதியர்களான ராஜேஷ் தல்வார் - நூபுர் தம்பதியரால், தாஸ்னா சிறையில் நடத்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு, அவர்களின் மகள் ஆருஷியின் பெயர் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil dasna jail authorities to rename its dental clinic after aarushi
உபி.,யில் உள்ள தாஸ்னா சிறையில் உள்ள பல் மருத்துவமனைக்கு ஆருஷி பெயர் - அரசு முடிவு


டெல்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவ தம்பதிகள் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வாரின் மகள் ஆருஷி. இவர் கடந்த 2008ம் ஆண்டும் வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். அந்த வீட்டின் வேலைக்காரர் ரத்த காயங்களுடன் வீட்டு மாடிப்படியில் இறந்து கிடந்தார்.

பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கில், ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்களை காசியாபாத்தில் உள்ள தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அங்குள்ள கைதிகளுக்கு பல் மருத்துவம் செய்து வந்தனர்.

தற்போது அவர்கள் நிரபராதி என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 16ம் தேதி வெளியே வந்தனர். அவர்கள் சிறையில் நடத்தி வந்த சிறை பல் மருத்துவமனைக்கு, அவர்களின் மகள் ஆருஷியின் பெயர் வைக்க உள்ளதாக உபி அரசு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி