ஆப்நகரம்

கொரோனா தடுப்புக்கு ஊமத்தை பூ மருந்து: 8 பேர் கவலைக்கிடம்

கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரித்து உட்கொண்ட 8 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Samayam Tamil 7 Apr 2020, 7:42 pm
ஹைதராபாத்: கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரித்து குடித்த 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும் நயவஞ்சக கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்த வருகிற 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வதந்திகளை பரப்புபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க உலக மருத்துவ வல்லுநர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

கொரோனா ட்ரீட்மென்ட்: இதுவரை டிஜ்சார்ஜ் ஆனாவங்க எத்தனை பேர்?!

இந்நோய்க்கு மலேரியாவை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர் இது, பலன் அளிக்கிறது என்பதற்கான அறிவியல்பூர்வமான முடிவுகள் இல்லை என்றாலும், ஓரளவுக்கு பயன் தரக்கூடியது என்பதால் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரித்து உட்கொண்ட 8 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, உரிய மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சித்தூர் காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி