ஆப்நகரம்

கிடைச்சாச்சு அனுமதி; ரெடியாகும் 2-18 வயதினருக்கான கோவிட் தடுப்பூசி!

18 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு கோவிட் தடுப்பூசி தயாரிக்க உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.

Samayam Tamil 13 May 2021, 2:21 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றின் துணையுடன் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் 2 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
Samayam Tamil Covid Children Vaccine


இதற்கான முதல்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அனுமதி அளித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ்; மத்திய அரசு புதிய யோசனை!
அதன்படி, ஆரோக்கியமாக இருக்கும் 525 தன்னார்வலர்கள் மீது அடுத்தகட்ட பரிசோதனைகளை பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், நாக்பூரில் உள்ள மெடிட்டிரினா மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ளன.

எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், தம்பி அருள்நிதி பெண்டை நிமித்தப் போகும் பாலா?
கடந்த ஜனவரி மாதம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், குழந்தைகள் மீது கொரோனா தடுப்பூசியை பரிசோதித்து பார்க்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே ரேபிஸ், போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகளை புதிதாக பிறந்த குழந்தைகள் மீதும் செலுத்தி பரிசோதனை செய்துள்ளோம்.

நாடு முழுவதும் கட்டுப்பாடுகளும், முழு ஊரடங்கும்; மாநில வாரியாக லிஸ்ட்!

அவை பாதுகாப்பான தடுப்பூசிகள் என உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. எனவே இம்முறையும் பாதுகாப்பான இந்திய சமூகத்தை உருவாக்க குழந்தைகள் மீது கொரோனா தடுப்பூசியை செலுத்தி ஆய்வு செய்யவுள்ளோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி