ஆப்நகரம்

10 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் மாலிவால்

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தி 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஸ்வாதி மாலிவால் இன்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டிருக்கிறார்.

Samayam Tamil 22 Apr 2018, 3:56 pm
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தி 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஸ்வாதி மாலிவால் இன்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டிருக்கிறார்.
Samayam Tamil DbYFe4-XcAAQYbh


ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகபட்ச தண்டனை வழங்கவும் வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

டெல்லி ராஜ்காட்டில் 10 நாட்களாக நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை அவர் இன்று மதியம் 2 மணிக்கு முடித்துக்கொண்டிருக்கிறார். மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளதைத் தொடர்ந்து தனது போராட்டத்தை முடித்திருக்கும் அவர், “முதலில் தனியொருத்தியாக போராட்டத்தை ஆரம்பித்தேன். பின்னர், நாடு முழுவதிலும் இருந்து மக்களின் ஆதரவு கிடைத்தது. இது மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.” என்று கூறியுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எதிரொலியாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த செய்தி