ஆப்நகரம்

அன்று டிராக்டர், இன்று குப்பை வண்டியில்... அனாதையாக செல்லும் கொரோனா சடலங்கள்..!

ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்றதான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 11 Aug 2020, 9:51 pm
ஆந்திர மாநிலம் நெல்லூரில் கொரோனவால் இறந்த இரண்டு பேரை அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் இல்லாததால் குப்பை ஏற்றி செல்லும் டிராக்டரில் கொண்டு செல்வதான புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஆந்திராவில் இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன்னர் பலமுறை நடந்துள்ளது.
Samayam Tamil corona dead bodies andhra


கொரோனவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆம்புலன்சில் ஏற்றி சென்று சுகாதாரத்துறை நெறிமுறைகளின்படி அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், கொரோனா பரவலின் வேகத்தை சமாளிக்க முடியாமலும், இறந்தவர்களின் பின்புலத்தை வைத்து சில மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஜேசிபி, டிராக்டர் போன்ற அனுமதிக்கப்படாத வாகனங்களில் கொண்டு சென்று அடக்கம் செய்வது இறந்தவர்களை அவமதிப்புடன் இவ்வுலகை விட்டு அனுப்பி வைப்பதாக உள்ளது.

சுகாதாரத்துறையில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர், செவிலியர்களின் உடல்களைக்கூட விருப்பப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்ய கூடாதென போராட்டம் செய்யும் மக்கள் ஒருபுறம் இருக்க, இறந்தவர்கள் உடல்களை குப்பை வண்டியில் கொண்டு செல்லும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற சம்பவம் ஏற்கெனவே புதுச்சேரியில் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி