ஆப்நகரம்

அனல் காற்று, பஞ்சம் , உயிரிழப்பு ஏற்படும்: காலநிலை மாற்றம் தொடர்பான திடுக்கிடும் ஆராய்ச்சி தகவல்!

அனல் காற்று, பஞ்சம் , உயிரிழப்பு ஏற்படும்: காலநிலை மாற்றம் தொடர்பான திடுக்கிடும் ஆராய்ச்சி தகவல்!

Samayam Tamil 8 Oct 2018, 1:41 pm
Refer in English
Samayam Tamil 39130534_303

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ’இன்டெர்-கவர்மண்டெல் பேனல் ஆன் கிலைமெட் சேஞ்ச்“(ஐபிசிசி) என்ற அமைப்பு காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமடைதல் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் புவிவெப்பமடைதல் அதிகரித்துள்ளதால் உலகின் வெப்பநிலை 2 டிகிரி அதிகரிக்கும் என்று கண்டறியபட்டுள்ளது.

இந்த ஆய்வில் வெளியான முக்கியமான தகவல் பின்வருமாறு:

உலக வெப்பநிலை உயர்வால் ஆசிய கண்டம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கராச்சி மற்றும் கொல்கத்தாவில் அதிவெப்ப அனல் காற்று உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு இதே பகுதியில் அனல் காற்றால் 2,500 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் அறிவுறுத்தியபடி, புவிவெப்பமடைதலை 1.5 டிகிரிலிருந்து உயர்த்தாமல் பார்த்துக்கொண்டால் 2050-க்குள் பல லட்ச மக்களின் உயிரை காப்பாற்ற முடியும் என்றும், அப்படி புவி வெப்பமடைதலை கட்டுபடுத்தாமல் இருந்தால் 2050க்குள் அதிகமானோர் உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை மாற்றத்தால் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் மக்களை தாக்கும். மேலும் புவி வெப்பமடைவதால் ஏற்படும் காலநிலை மாற்றம் விவசாயத்தை அதிகமாக பாதிக்கும். இதனால் கடும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த கால நிலை மாற்றத்தால் அதிகமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை பாதிக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி