ஆப்நகரம்

Global Warming:2052 க்குள் இந்தியாவுக்கு வருகிறது மிகப்பெரிய ஆபத்து

புவியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கு வருங்காலத்தில் மிக அபாயகரமான விளைவுகள் ஏற்படும் என சர்வதேச அறிக்கை எச்சரித்துள்ளது.

Samayam Tamil 8 Oct 2018, 6:58 pm
புவியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கு மிக பயங்கரமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil hot2


IPCC எனப்படும் பருவநிலை மாறுபாடு தொடர்பான பல்வேறு நாடுகள் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் பல திடுக்கிடும் அறிவிப்பு வெளியாகியுள்ளன. அதில் வரும் 2030 முதல் 2050 ஆண்டிற்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும்.

இதன் காரணமாக பனிப் பாறைகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, வெப்ப நிலை உயர்வால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


வெப்ப நிலை அதிகரிப்பால் அதி பயங்கரமான அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. ஏற்னவே கோடை காலத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வரும் காலத்தில் கொல்கத்தா மற்றும் கராச்சி நகரங்களில் மிக அதிக வெப்பநிலையால் வெயில் மேலும் சுட்டெரிக்கும்.


வெப்பநிலை அதிகரிக்கும் போது அதனால் ஏற்படும் சுகாதார பிரச்னை காரணமாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுகாதார பிரச்னையால் பலர் வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி