ஆப்நகரம்

Kerala Floods: கேரள கன மழைக்கு 167 பேர் பலி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு!!

கேரளாவில் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 167 பேர் பலியாகி இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Aug 2018, 1:00 pm
கேரளாவில் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 167 பேர் பலியாகி இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கேரள கன மழைக்கு 167 பேர் பலி
கேரள கன மழைக்கு 167 பேர் பலி


கேரளாவில் கடந்த 8ஆம் தேதியில் இருந்து கனத்த மழை பெய்து வருகிறது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. காசர்கோடு தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்துக்கும் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. பல இடங்களில் மக்களை மீட்பதற்கு மீட்புப் படையினர் மற்றும் விமானப் படை வீரர்கள் போராடி வருகின்றனர். கேரள மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அளித்த பேட்டியில், ''கேரளாவில் இதுவரைக்கும் பெய்த மழைக்கு 167 பேர் பலியாகியுள்ளனர். 2.5லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதனம்திட்டா, எர்ணாகுளம், ஆழப்புழா, திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 23 விமானப் படை விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

எர்ணாகுளத்தில் இருந்து இதுவரைய் 2,500பேரும், பதனம்திட்டாவில் இருந்து 580 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தங்களது படகுகளைப் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் படகுகளை வழங்கி உதவி வருகிறது. கேரளாவுக்கு மேலும் 40 மீட்புப் படையினர் வர உள்ளனர்'' என்றார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிக்கு பாதிப்பு இருந்து வருகிறது. கேரளாவின் கடந்த நூற்றாண்டு வரலாற்றில் இப்படியொரு பேரழிவை அந்த மாநில மக்கள் சந்தித்து இல்லை. கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் தொடர்ந்து தங்களது அண்டை மாநில மக்களுக்கு உதவி வருகின்றனர்.

அடுத்த செய்தி