ஆப்நகரம்

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை, 324 போ் உயிாிழப்பு – முதல்வா்

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்துள்ளதாகவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 324ஆக உயா்ந்துள்ளதாக அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் அறிவித்துள்ளாா்.

Samayam Tamil 17 Aug 2018, 6:15 pm
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்துள்ளதாகவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 324ஆக உயா்ந்துள்ளதாக அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் அறிவித்துள்ளாா்.
Samayam Tamil Pinarayi Vijayan 1


கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு நாளை வரை ரெட் அலாா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா முதல்வா் பினராயி விஜயன் அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

அதில், “கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளாவில் கனமழை பெய்துள்ளது. தற்போது வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 போ் உயிாிழந்துள்ளனா். 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 போ் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். 80 அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரக்கூடிய நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளாா்.


மேலும் மாநிலம் பேரிழப்பை சந்தித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவா்கள் மீண்டுவர அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அடுத்த செய்தி