ஆப்நகரம்

அசாம் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி..! மீட்பு பணிகள் தீவிரம்...

அசாமில் இன்று ஏற்பட்ட தொடர் நிலச்சரிவில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 2 Jun 2020, 3:22 pm
தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி க்ரீம்கஞ்ச், கச்சார் மற்றும் ஹையிலகந்தி மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பாதிப்பு விவரம் குறித்து விரிவான தகவல் இன்னும் வரவில்லை. சம்பவ இடங்களுக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
Samayam Tamil அசாம் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி


Getting growth back: இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரை

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இந்த மாவட்டங்களில் ஏற்கெனவே வெள்ளத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நல்பரி, கோல்பாரா, நாகான், ஹோஜாய், மேற்கு கர்பி அங்லாங், திப்ருகார் மற்றும் டின்சுகியா மாவட்டங்களின் 356 கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி