ஆப்நகரம்

நள்ளிரவு சோகம்; இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டடம் - பலர் பலியானதால் அதிர்ச்சி!

பிவாண்டியில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

Times Travel 21 Sep 2020, 7:45 am
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள நகரம் பிவாண்டி. இங்குள்ள படேல் காம்பவுண்ட் ஏரியாவில் ஜிலானி அபார்ட்மெண்ட் என்ற மூன்று மாடிக் கட்டடம் இருந்தது. இதில் 21 பிளாட்கள் இருந்தன. இது 1984ஆம் ஆண்டு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென மூன்று மாடிகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். இதனால் விபத்து ஏற்படும் போது தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Samayam Tamil Maharashtra Building Collapse


இதுபற்றி தகவலறிந்து தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் விரைந்து செயல்பட்ட உள்ளூர் மக்கள் 20 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மேலும் 25 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையொட்டி மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கட்டட விபத்தில் சிக்கி அடுத்தடுத்து பலர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி 8 பேர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்பீரமாக புறப்பட்ட ஐஎன்எஸ் விராட் - கண்ணீரில் மூழ்கிய கடற்படை!

இதன் தொடர்ச்சியாக தனது எல்லைக்குட்பட்ட கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய பிவாண்டி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் ரைகாட் மாவட்டத்தில் உள்ள மகத் ரெஸிடென்சியல் ஏரியாவில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அடுத்த செய்தி