ஆப்நகரம்

​ உ.பி.,யில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

உத்தரபிரதேச மாநிலத்தில் கடன் தொல்லையால் மனமுடைந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

TNN 10 Sep 2016, 10:25 pm
உத்தரபிரதேசம் : உத்தரபிரதேச மாநிலத்தில் கடன் தொல்லையால் மனமுடைந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil debt ridden farmer commits suicide in uttar pradesh
​ உ.பி.,யில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை


உத்திரபிரதேசம் மாநிலம் நவுளி ஹர்நாத் கிராமத்தில் சேர்ந்தவர் ரஞ்சித் யாதவ் என்ற விவசாயி. 42 வயதான இவர் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை அடைக்க முடியாமல் மன வருத்ததிலிருந்த அந்த விவசாயி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ரஞ்சித் யாதவ் குடும்பத்தாரினர் கூறுகையில், கிசான் கிராம வங்கியில் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி, பின் அதை செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று மாலை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி