ஆப்நகரம்

சசி தரூரை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்

தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் சந்தித்தார்.

Samayam Tamil 16 Apr 2019, 12:00 pm
தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் சந்தித்தார்.
Samayam Tamil nirmala-2


திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரான சசி தரூர் நேற்று கோவிலில் துலாபார சடங்கின் போது பலத்த காயமுற்றார். தராசு கொக்கி தலையில் விழுந்ததில் சசி தரூருக்கு ரத்தம் கொட்டியது. உடனடியாக அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கேரளாவுக்கு பிரச்சாரத்திற்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சசி தரூர், இந்திய அரசியலில் அரிதாக காணக்கிடைக்கும் நல்ல பண்புக்கு, நிர்மலா சீத்தாராமன் உதாரணம் எனப் புகழ்ந்துள்ளார்.

அடுத்த செய்தி