ஆப்நகரம்

ஹலோ தேஜஸ், செம ஜாலி பயணம்- ராஜ்நாத் சிங்கிற்கு இப்படியொரு பெருமை!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேஜஸ் போர் விமானத்தில் பறந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 19 Sep 2019, 12:58 pm
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் எச்.ஏ.எல் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை புரிந்தார். இவர் தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்காக ஆயத்தமானார்.
Samayam Tamil Rajnath Singh


இது இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான இலகு ரக போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. போர் விமானத்திற்கு பறப்பதற்கு தகுந்த ஆடைகளை அணிந்து கொண்ட ராஜ்நாத் சிங், தேஜஸ் விமானத்தில் ஏறினார்.

போலீசாரே இப்படி தப்பு பண்ணா எப்படி? கைது நடவடிக்கை எடுத்த அதிரடி படை!

அவருக்கு விமானப் படை துணை தளபதி என்.திவாரி உதவி செய்தார். இருவரும் தேஜஸ் விமானத்தில் ஒன்றாக பறக்கத் தொடங்கினர். அப்போது சுற்றி இருந்தவர்களைப் பார்த்து, ராஜ்நாத் சிங் கைகளை அசைத்தார்.

இதையடுத்து விமானம் வானை நோக்கி பறந்தது. சுமார் அரை மணி நேரம் பறந்த பின் தரையிறங்கினர். இதையடுத்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், மிகவும் சிறப்பான பயணமாக இருந்தது.

புதிய மோட்டார் வாகன சட்டம் : அபராதமா, வழிப்பறியா? - லாரி உரிமையாளர்கள் கேள்வி

இதை மகிழ்ச்சியுடன் நினைவில் கொள்வேன். எச்.ஏ.எல், டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மிக்க நன்றி. வெளிநாடுகளுக்கு போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறினார்.

பின்னர் பேசிய ஏர் வைஸ் மார்ஷல் என்.திவாரி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேஜஸ் விமானத்தில் பறந்ததன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். நாங்கள் ஒலியின் வேகத்திற்கு மிக அருகில் பயணித்தோம் என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்!

இந்தப் பயணத்தின் மூலம் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.

அடுத்த செய்தி