ஆப்நகரம்

இந்திய ராணுவத்திலிருந்து விடை பெற்றார் பிபின் ராவத்!

இந்திய ராணுவ தளபதியாக தான வகித்த பொறுப்பை விடுத்து விடைபெற்றார் பிபின் ராவத். ராணுவம் மரியாதையுடன் பிரியாவிடை பெற்றார். ஜனவரி ஒன்றாம் தேதி முப்படைகளின் தளபதியாக பொறுப்பு ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 31 Dec 2019, 10:21 am
நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முப்படைகளில் தலைமையகத்திற்குத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பதவி ஏற்பு டெல்லியில் நாளை நடக்கவுள்ள நிலையில், ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து பிபின் ராவத்துக்கு ராணுவ மரியாதையுடன், பிரியாவிடை உபசரிப்பு வழங்கப்பட்டது.
Samayam Tamil images (28)


இதைத் தொடர்ந்து பிபின் ராவத் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிபின் ராவத். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நான் ராணுவ தளபதி பொறுப்பிலிருப்பது இன்றே கடைசி. இந்த நேரத்தில் ராணுவத்தில் உள்ள அனைவருக்கும், குறிப்பாகக் கடினமான நேரங்களில் உடனிருந்த அனைவருக்கும் எனது நன்றி” என்றார்.

2019-ல் தடம் பதித்த இந்திய அரசியல் நிகழ்வுகள்!

தொடர்ந்து அங்கிருந்த நிருபர்கள், பாகிஸ்தான், சீன எல்லைகளில் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பிபின் ராவத், “ஆம் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது” எனப் பதிலளித்தார்.


இதற்கிடையே பிபின் ராவத் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து விமர்சித்ததிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்திய வரலாற்றிலே ராணுவ தளபதி அரசியல் பேசியது அதுவே முதல் முறை.

ராணுவ தளபதி பொறுப்பிலிருந்தவர் இதுபோன்ற கருத்தைக் கூறியதற்காக, நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் ராணுவ தளபதி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பயங்கர விபத்தில் சிக்கிய சபரிமலை பேருந்து- தமிழக பக்தர் பலியானதால் அதிர்ச்சி!

மத்திய அரசு புதிதாக முப்படைகள் தலைமையிடம் உருவாக்கியதைத் தொடர்ந்து, அதற்குத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட இருப்பதானாலே, இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி