டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ,டெல்லி மாநில அரசை பாகிஸ்தான் போல நடத்துவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி அரசின் செயல்பாடுகள், வருங்கால திட்டங்கள் குறித்து இணையதளம், சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் எழுப்பிய கேள்விக்கு அரவிந்த கெஜ்ரிவால் நேற்று பதிலளித்தார்.இந்த நிகழ்ச்சிக்கு "அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேசுங்கள்(Talk to AK)" எனப் பெயரிடப்பட்டுள்ளது.இரண்டு மணிநேரம் நடைப்பெற்ற நேரலை நிகழ்ச்சியில் இலவச தொலைப்பேசி மூலம் மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
"டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உறவு இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை போல மாறிவிட்டது. மத்திய அரசு நட்புடன் நடந்த்து கொண்டால் இன்னும் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி இருக்க முடியும். ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசால் நிறைவேற்றப்பட்ட 14 மசோதாக்கள் ,பல மாதங்ககள் கடந்தும் அவற்றிக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கவில்லை. குறிப்பாக லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு எட்டு மாதங்கள் ஆகியும் அதற்கான ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை" என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் செயல்பாடுகள், வருங்கால திட்டங்கள் குறித்து இணையதளம், சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் எழுப்பிய கேள்விக்கு அரவிந்த கெஜ்ரிவால் நேற்று பதிலளித்தார்.இந்த நிகழ்ச்சிக்கு "அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேசுங்கள்(Talk to AK)" எனப் பெயரிடப்பட்டுள்ளது.இரண்டு மணிநேரம் நடைப்பெற்ற நேரலை நிகழ்ச்சியில் இலவச தொலைப்பேசி மூலம் மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
"டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உறவு இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை போல மாறிவிட்டது. மத்திய அரசு நட்புடன் நடந்த்து கொண்டால் இன்னும் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி இருக்க முடியும். ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசால் நிறைவேற்றப்பட்ட 14 மசோதாக்கள் ,பல மாதங்ககள் கடந்தும் அவற்றிக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கவில்லை. குறிப்பாக லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு எட்டு மாதங்கள் ஆகியும் அதற்கான ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை" என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.