ஆப்நகரம்

தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தலாம்...

நாட்டின் தலைநகரில் நூறு சதவீத பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தலாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்...

Samayam Tamil 18 May 2020, 11:35 pm
டெல்லியில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களும் நூறு சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்றும் அதில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் உத்தரவு ஒன்றை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தலாம்...
தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தலாம்...


டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இந்த சட்டத்தைத் திங்கட்கிழமை அறிவித்தார். அதன்படி கட்டட வேலைகளைத் தொடரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக டெல்லியில் உள்ள கட்டட தொழிலாளர்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பொருந்தாது என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அதாவது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவித பணிகளை மேற்கொள்ளவோ, தனியார் நிறுவனங்கள் இயங்கவோ அனுமதி இல்லை.

எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் செயல்படும். இதற்கிடையே டெல்லியில் ஊரடங்கை 31ஆம் தேதி வரை நீட்டிக்கத் தேசிய பேரிடர் மீட்பு துறை பரிந்துரை செய்துள்ளது.

பெட்ரோல் விற்பனை மீண்டும் உயர்வு!

கொரோனா பாதிப்பு மாநிலங்கள் பட்டியலில் டெல்லி 4வது இடத்தில் உள்ளது. கடந்த 30 நாட்களில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது. இந்த உத்தரவுகளுக்கு மத்தியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், "மக்கள் கொரோனாவோடு வாழ பழக வேண்டும்" என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அடுத்த செய்தி