ஆப்நகரம்

மகன் செய்த குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிக்கு தண்டனை

மகன் செய்த குற்றத்துக்காக டெல்லியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 18 Sep 2018, 8:48 am
மகன் செய்த குற்றத்துக்காக டெல்லியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil img_1537201205196_128


டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் ரோஹித் சிங் தோமர். இவர் ஒரு பெண்ணை தன் நண்பர் பணிபுரியும் தனியார் அலுவலகம் ஒன்றுக்கு அழைத்துள்ளார். அங்கு ரோஹித் அந்தப் பெண்ணை சிறிதும் இரக்கமின்றி கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனை ரோஹித்தின் நண்பர் வீடியோவாகப் பதிவுசெய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துபறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.

இதனையடுத்து போலீசார் ரோஹித் தோமரை கைது செய்தனர். இந்நிலையில் அவரது தந்தை தனது காவல்துறை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

ரோஹித் தன்னைத் தாக்கியதைப் பற்றி பாதிக்கப்பட்ட பெண் உட்பட யாரும் புகார் அளிக்க முன்வராத நிலையில், ரோஹித்தை திருமணம் செய்துகொள்ள இருந்த பெண் செப்டம்பர் 13ஆம் தேதி உத்தம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின், செப்டம்பர் 14ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணும் தன் தரப்பில் புகார் கொடுத்தார். ரோஹித் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் தான் போலீஸில் புகார் அளிப்பதாகச் சொன்னதும் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகவும் தன் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித் குறித்து முதலில் புகார் கொடுத்த, அவரைத் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண், அவருடன் நடக்க இருந்த திருமணத்தை ரத்துசெய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி