ஆப்நகரம்

டெல்லி கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா தெரபி: பலன் கிடைத்ததா?

கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல பலன் கிடைத்துள்ளது.

Samayam Tamil 21 Apr 2020, 4:43 pm
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தியதில் நல்ல பலன் கிடைத்துள்ளது.
Samayam Tamil கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி


டெல்லியில் சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் 49 வயதுடையவர் இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய கொரோனா அறிகுறிகளுடன் ஏப்ரல் 4ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து இவருக்கு உடல் நிலை மோசமாகிக் கொண்டு இருந்தது. ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. இதையடுத்து நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதும் அவரது உடல் நிலையில் எந்த முனேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் அவரது குடும்பத்தினர் அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்தியாவிலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவரை அவரது குடும்பத்தினரே அடையாளம் காட்டினர். அவருக்கு பலமுறை அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இவரது உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, நோயாளியின் உடம்பில் ஏப்ரல் 14ஆம் தேதி செலுத்தப்பட்டது.

ஊரடங்கில் இத்தனை லட்சம் பேரின் பசியை போக்கிய ரயில்வே!

இந்த சிகிச்சைக்குப் பின்னர் ஏப்ரல் 18ஆம் தேதி வென்டிலேட்டரில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தனி அறைக்கு மாற்றப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து அவருக்கு உணவு வழங்கப்படுகிறது.

ரொம்ப போர் அடிக்குது; எத்தனை நாள் தான் இப்படி? ஒரே அடியாய் 250 கி.மீ பாய்ந்த அமைச்சர்!

இதுகுறித்து மேக்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் சந்தீப் புதிராஜா கூறுகையில், ''கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்து வருகிறார் என்ற செய்தி சந்தோசம் அளிக்கிறது. அதேசமயம் அவர் முழுவதும் பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குணமடைந்துவிட்டார் என்று கூறி விட முடியாது. நாங்கள் வேறு சிகிச்சைகளும் அவருக்கு அளித்தோம். இந்தியா முழுவதும் இந்த சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வேண்டும். இந்த நோயில் இருந்து குணமடைந்தவரிடம் இருந்து 400 மி. லிட்டர் அளவிற்கு ரத்தம் எடுத்தால், இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு, தலா 200 மில்லி அளவிற்கு அளிக்கலாம்'' என்றார்.

இந்தியாவில் குறையும் கோவிட்-19 இரட்டிப்பு விகிதம்- நம்பிக்கையூட்டும் புள்ளிவிவரம்!

இந்த நோயாளி தற்போது குணமடைந்து இருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்து எடுத்த ரத்த மாதிரியில் அவருக்கு நெகடிவ் என்று வந்துள்ளது.

அடுத்த செய்தி