ஆப்நகரம்

விஜய் மல்லையாவிற்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணை: டெல்லி உயர்நீதிமன்றம்

பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் நாடு திரும்பாததால், ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 4 Nov 2016, 2:17 pm
டெல்லி: பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் நாடு திரும்பாததால், ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil delhi court issues non bailable warrant against vijay mallya
விஜய் மல்லையாவிற்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணை: டெல்லி உயர்நீதிமன்றம்


பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்று, திருப்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர் மீது சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்தது. மேலும் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவிற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. லண்டனில் வசித்து வரும் மல்லையா ஆஜராகவில்லை. இந்நிலையில் மல்லையா மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால், அவரை இந்தியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் சட்டம் இடமளிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செக்மோசடி வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு, மல்லையாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதிலும் அவர் ஆஜராகவில்லை.

A Delhi court on Friday issued a non-bailable warrant against liquor baron Vijay Mallya for allegedly evading summons in a case of FERA violation.

அடுத்த செய்தி