ஆப்நகரம்

உரி மீது தாக்குதல்: அமைச்சர் ராஜ்நாத் தலைமையில் ஆலோசனை கூட்டம்

உரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று உயர்மட்ட குழுக் கூட்டம் டில்லியில் நடத்து வருகிறது. உரி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

TOI Contributor 19 Sep 2016, 10:56 am
உரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று உயர்மட்ட குழுக் கூட்டம் டில்லியில் நடத்து வருகிறது. உரி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil delhi defence min manohar parrikar mos pmo jitendra singh arrive for high level meet chaired by hm uriattack
உரி மீது தாக்குதல்: அமைச்சர் ராஜ்நாத் தலைமையில் ஆலோசனை கூட்டம்


இந்நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்து வரும் இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்திய உளவுத்துறை இயக்குநர் தினேஷ்வர் சர்மா, ''ரா'' தலைவர் ராஜிந்தர் கன்னா, மத்திய உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள், எல்லை பாதுகாப்புப் படை டிஜி ஷர்மா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டிஜி துர்கா பிரசாத் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
Delhi: Defence Min. Manohar Parrikar & MoS PMO Jitendra Singh arrive for high-level meet chaired by HM #UriAttack pic.twitter.com/wEzVSuaaZH— ANI (@ANI_news) September 19, 2016
இதற்கிடையே முன்னதாக பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிகர் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. உரி சம்பவம் குறித்து இன்று ராஜ்நாத் சிங் மற்றும் அருண் ஜெட்லியை பிரதமர் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளுக்குப் பின்னர் உரி ராணுவ மையத்தின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க தேசிய புலனாய்வுக் குழு இன்று உரி செல்கிறது.

ஸ்ரீநகரில் இருந்து உரி பகுதி 102 கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்திய, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இப்பகுதி இருப்பதால், எல்லை தாண்டி வந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஜெயஷ் இ முகம்மது பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. அங்கு கிடந்த ஆயுதங்களில் பாகிஸ்தானின் சின்னம் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி