ஆப்நகரம்

தொடா் போராட்டம் நடத்திய டெல்லி துணைமுதல்வா் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் 6 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திய துணைமுதல்வா் மணிஸ் சிசோடியா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Samayam Tamil 18 Jun 2018, 4:46 pm

டெல்லி துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் 6 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திய துணைமுதல்வா் மணிஸ் சிசோடியா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Samayam Tamil Manish Sisodia


தலைநகா் டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாாிகள் பகுதிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் ரேஷன் பொருள்களை பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோாியும், ஐ.ஏ.எஸ். அதிகாாிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுயுறுத்தியும் மாநில முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால், துணைமுதல்வா் மணிஸ் சிசோடியா, அமைச்சா்கள் இருவா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

உண்ணாவிரதப் போராட்டம் 6 நாள்களை கடந்து செல்லும் நிலையில் அமைச்சா் சத்யேந்திர குமாா் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரைத் தொடா்ந்து துணைமுதல்வா் மணிஸ் சிசோடியோவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா்ா.

துணைமுதல்வரை ஆய்வு செய்த மருத்துவா்கள் அவரது ரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு மிகவும் குறைந்துள்ளதாக மருத்துவா்கள் தொிவித்துள்ளனா். மேலும் இந்த அளவு 2 புள்ளிகள் குறையும் பட்சத்தில் தீவிர பாதிப்பு ஏற்படலாம் என்றும் மருத்துவா்கள் எச்சரித்தனா். இதனைத் தொடா்ந்து அவா் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டா்ா.

அடுத்த செய்தி