ஆப்நகரம்

கொரோனாவுக்கு ஆளான துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றுக்கு ஆளான டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிஷோடியா, மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 23 Sep 2020, 7:16 pm
டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிஷோடியாவுக்கு கடந்த 14 ஆம் தேதி (செப்டம்பர் 14) கொரோன நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தம்மைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
Samayam Tamil deputy cm


இந்த நிலையில் இன்று அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததுடன், மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர், லோக் நாயக் ஜெயபிரகாஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சில மாதங்களுக்கு முன் கொரோனா நோய்த்தொற்று ஆளானார். அப்போது பிளாஸ்மாதெரபி சிகிச்சை மூலம் அவர் தொற்றிலிருந்து விடுப்பட்டார்.


இந்த நிலையில் தற்போது, டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிஷோடியா கொரோனாவுக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி