டெல்லி: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான ஒற்றைப்படை இரட்டைப்படை வாகனப்பதிவெண் கட்டுப்பாட்டை டெல்லி அரசு தொடங்குவதற்கு முன்பே கைவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால், வெளியிடங்களுக்குச் செல்லும்போது சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் போன்றவற்றால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும் என்றும் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்த வாகனக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த வாகனக்கட்டுப்பாட்டில் பெண்கள், மத்திய அமைச்சர்கள், மருத்துவ வாகனங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் டெல்லி அரசு கூறியது.
இதனை பரிசீலனை செய்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதிவிலக்குகள் இல்லாமல் இத்திட்டத்தை அமல்படுத்தலாம் என்று உத்தரவிட்டது. டெல்லி அரசின் விதிவிலக்குகளை ரத்து செய்த பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவால் டெல்லி அரசு தனது திட்டத்தில் பின்வாங்கியுள்ளது. இதனால், அறிவித்தபடி வாகனக்கட்டுப்பாடு 13ஆம் தேதி முதல் அமலாகாது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால், வெளியிடங்களுக்குச் செல்லும்போது சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் போன்றவற்றால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும் என்றும் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்த வாகனக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த வாகனக்கட்டுப்பாட்டில் பெண்கள், மத்திய அமைச்சர்கள், மருத்துவ வாகனங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் டெல்லி அரசு கூறியது.
இதனை பரிசீலனை செய்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதிவிலக்குகள் இல்லாமல் இத்திட்டத்தை அமல்படுத்தலாம் என்று உத்தரவிட்டது. டெல்லி அரசின் விதிவிலக்குகளை ரத்து செய்த பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவால் டெல்லி அரசு தனது திட்டத்தில் பின்வாங்கியுள்ளது. இதனால், அறிவித்தபடி வாகனக்கட்டுப்பாடு 13ஆம் தேதி முதல் அமலாகாது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.