ஆப்நகரம்

டெல்லியில் வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள்

டெல்லி: அரசின் 40 சேவைகளை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.

Samayam Tamil 10 Sep 2018, 8:40 pm
டெல்லி: அரசின் 40 சேவைகளை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.
Samayam Tamil 1536482928-Arvind_Kejriwal_IANS_11_0


டெல்லியில் ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் இத்திட்டத்தின்படி சாதிச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை வீட்டுக்கே தேடிவந்து அளிக்கப்படும். இதற்கான கட்டணம் 50 ரூபாய் மட்டுமே.

ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், திருமண பதிவு, டூப்ளிகேட் ஆர்.சி., முகவரி மாற்றம் உள்ளிட்ட 40 சேவைகள் இதில் அடங்கும். 1076 என்ற எண்ணில் தொடர்புகொண்டு இச்சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் குறித்து கடந்த மாதமே கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டார். “டோர் டெலிவரி சர்வீஸ் என்பது அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரட்சி. ஊழல் மீது விழும் பெரும் இடி. இந்த திட்டம் உலகிலேயே முதல் முறையாக டெல்லியில் அளிக்கப்படவுள்ளது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி