ஆப்நகரம்

வீட்டிற்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்க கெஜ்ரிவால் உத்தரவு

வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்பட்டுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 6 Jul 2018, 12:02 pm
டெல்லி : வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்பட்டுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil kejriwal


கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி செய்து வருகின்றது. இவர் தேர்தலில் போட்டியிடும் போது பல்வேறு திட்டங்களை முன்வைத்தார்.

அந்த வகையில் டெல்லிவாசிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் திட்டமும் ஒன்று. அந்த திட்டம் குறித்து டெல்லி சட்டமன்றத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே கொண்டுவரப்பட்டது. இருப்பினும் பல இழுபறிகள் நடந்து வந்தன.

இந்நிலையில் டெல்லியில் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உணவுத்துறை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவு அதிகாரம் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு கெஜ்ரிவால் அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளதால். அந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்தியுள்ளார் கெஜ்ரிவால்.

அடுத்த செய்தி