ஆப்நகரம்

டெல்லியில் 3 ஆண்டுகளுக்குப் பின் பசுமை தீபாவளி!

டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த மாசு இந்த ஆண்டு தீபாவளியில் பதிவாகியுள்ளது என்று காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு குறித்து ஆய்வு செய்யும் சபார் அமைப்பு தெரிவித்துள்ளது.

TNN 20 Oct 2017, 8:26 pm
டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த மாசு இந்த ஆண்டு தீபாவளியில் பதிவாகியுள்ளது என்று காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு குறித்து ஆய்வு செய்யும் சபார் அமைப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil delhi has cleanest diwali in 3 yrs after cracker sale ban but dont celebrate
டெல்லியில் 3 ஆண்டுகளுக்குப் பின் பசுமை தீபாவளி!


டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிடப்பட்டது. மேலும், நவம்பர் 1ஆம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் பயனாக, குறைவான காற்று மாசு டெல்லியில் பதிவாகியுள்ளது. காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு குறித்து ஆய்வு செய்யும் சபார் அமைப்பு வெளியிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில, இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவானதாகும்.

தீபாவளியன்று (வியாழக்கிழமை) காற்று மாசு அளவு 319 ug/m3 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான அளவை விட அதிகம் என்றாலும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவு.

2016ஆம் ஆண்டு தீபாவளியன்று காற்றின் மாசு அளவு 431 ஆகவும் 2015ஆம் ஆண்டு தீபாவளியன்று காற்றின் மாசு அளவு 343 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி