ஆப்நகரம்

நிர்பயா வழக்கு: காலை 5.30 மணிக்கு தூக்கு..! சிறைக்கு முன்பு கூடிய பொதுமக்கள்

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க கோரிய மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 20 Mar 2020, 12:12 am
டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் போராடி உயிரிழந்தார். அந்த வழக்கில் எஞ்சியுள்ள அக்க்ஷய் குமார், வினய் சர்மா, முகேஷ் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு நாளை காலை 5.30 மணிக்கு தூக்கு என்ற நிலையில், அதனை நிறுத்தி வைக்கக்கோரி அளிக்கப்பட்டிருந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது.
Samayam Tamil நீதிபதிகளுடன் போராடும் குற்றவாளிகளின் வக்கீல்


குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜரான வக்கீல் ஏ.பி.சிங்கின் வாதத்தில் சட்ட ரீதியான ஆதாரங்களும், வழக்கை ஏற்றுக்கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும் நாளை காலை நடைபெறும் தூக்கு தூக்கு தண்டனையில் தடையேதும் இல்லை எனவும் உத்தரவிட்டுள்ளனர்.


டெல்லி திகார் சிறையில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படவுள்ள நிலையில், சிறை வாசலுக்கு முன்பு பொதுமக்கள் கூடியுள்ளனர். அவர்கள் தங்களது கைகளில் நிர்பயாவுக்கு நீதி கிடைத்து விட்டது என்ற வாசகங்களை கையில் வைத்திருந்தனர். அப்பகுதியில் போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது

இந்த வழக்கு விசாரணையின்போது நடைபெற்ற விவாதங்களாவன:

நீதிபதிகள் கேட்கும் கேள்விகள்:

உங்கள் மனு தாரர்கள் (குற்றவாளிகள்) கடவுளைச் சந்திக்கும் நேரம் நெருங்கிவிட்டது. நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களிடம் சரியான நியாயம் இல்லாத வரையில் எங்களால் உதவ முடியாது. உங்களுக்கு 4-5 மணி நேரம் மட்டுமே உள்ளது.

நேரத்தை கடத்தாமல் விஷயத்துக்கு வாருங்கள் . சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பவர்களுக்கு சட்டம் சாதகமானது. மார்ச் 4, 2020 வரை இரண்டரை ஆண்டுகளாக, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நீங்கள் எங்களை குறை கூறுகிறீர்களா? ஏற்கனவே இரவு 10.45 ஆகிறது, மரணதண்டனை அதிகாலை 5.30 மணிக்கு. எங்களுக்கு ஒரு முக்கிய வாதத்தை கொடுங்கள். ஏறக்குறைய நேரம் முடிந்துவிட்டது, போதுமான நேரம் இல்லை.

வழக்கு தொடர்பாக எந்த பிரமாண பத்திரங்களும் இல்லை. குறிப்புகளும் இல்லை. இந்த விஷயத்தில் எதுவுமே இல்லை. இந்த மனுவை தாக்கல் செய்ய உங்களுக்கு அனுமதி இருக்கிறதா என ஏ.பி.சிங்கை நோக்கி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஏ.பி. சிங்:

அதற்கு பதிலளித்த அவர், கொரோனா வைரஸ் காரணமாக எந்தவொரு ஜெராக்ஸ் இயந்திரமும் வேலை பார்க்கவில்லை என்றார். நீதி அவசர அவசரமாக புதைக்கப்படுகிறது என்றார்.

நீதிபதிகள்:

நீங்கள் இதுவரை சட்ட ரீதியாக எந்த வாதத்தையும் வைக்கவில்லை. உங்கள் நோக்கம்தான் என்ன? இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி