ஆப்நகரம்

2ஜி வழக்கு மேல்முறையீடு: பரபரப்பில் டெல்லி உயர் நீதிமன்றம் - அதுவும் இன்று!

சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

Samayam Tamil 29 Sep 2020, 12:10 pm
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அப்போது மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் திமுகவின் ஆ.ராசா. இதனால் முறைகேட்டில் இவருக்கு பெரும்பங்கு இருப்பதாக கூறப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை கையில் எடுத்தன.
Samayam Tamil Delhi HC


இதில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் புகார் தெரிவிக்கப்பட்டது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த வழக்கில் 2017 டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, குற்றச்சாட்டை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விரைவாக விசாரிக்கக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

2ஜி மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விரைவு விசாரணை!

இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இடையூறு ஏற்படுத்தியது. இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி