ஆப்நகரம்

ராணுவ ரகசியங்களை சீனாவுக்கு விற்ற டெல்லி பத்திரிகையாளர் கைது..!

இந்திய ராணுவ பாதுகாப்பு ரகசியங்களை சீன உள்துறைக்கு விற்ற டெல்லி பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 19 Sep 2020, 5:04 pm
டெல்லியில் பகுதி நேர பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா சீன உளவுத்துறைக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil rajeev sharma journalist


இந்தியாவிலிருந்து முக்கிய ரகசியங்களை அனுப்பியதற்கு ராஜிவ் சர்மாவுக்கு ஷெல் நிறுவனம் மூலம் பெரும் தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் ராஜிவ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கு உடந்தையாக இருந்த சீன பெண் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ராஜிவ் சர்மாவின் கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவசாய மசோதா: மோடி அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம்

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, சீனாவின் உளவுத்துறைக்கு. எல்லையில் இந்திய ராணுவத்தை வரிசைப்படுத்துதல் குறித்த தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்ததாகவும், அதற்காக அவருக்கு ஒன்றரை ஆண்டுகளில் ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு தொகை என்ற அடிப்படையில் 40 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி