ஆப்நகரம்

சரவணபவன் சாம்பாரில் பல்லி... பதிவானது வழக்கு...

உலகம் முழுவதும் பிரபலமான தென் இந்திய ஹோட்டலான சரவனபவனில் சுத்தமில்லை என வழக்குப் பதிவாகியுள்ளது...

Samayam Tamil 3 Aug 2020, 3:11 pm
தலைநகர் டெல்லியில் உள்ள சரவணபவன் ஹோட்டல் சாம்பாரில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
Samayam Tamil சரவணபவன் சாம்பாரில் பல்லி... பதிவானது வழக்கு...
சரவணபவன் சாம்பாரில் பல்லி... பதிவானது வழக்கு...


1982ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட சரவணபவன் ஹோட்டல் தனது கிளையை வட இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 39 கிளைகள் என உலகம் முழுவதும் 87 கிளைகள் சரவணபவனிற்கு உள்ளது. அப்படி ஒரு கிளை டெல்லி பூஷ் மார்க்கெட் பகுதியிலும் உள்ளது. குறிப்பிட்டக் கடை டெல்லியில் உள்ள தென் இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தப் பெற்றது.

குறிப்பிட்ட கடைக்குச் சமீபத்தில் ஒருவர் சென்று தோசை சாப்பிட்டுள்ளார். அப்போது சாம்பாரில் சின்ன பல்லி ஒன்று இருந்துள்ளது. அதிர்ந்துபோன அந்த நபர் பல்லி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்த பிற வாடிக்கையாளர்களும் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.

நாயிடமிருந்து ஐஸ்கிரீமை காக்க, 4 பேரைக் காரால் ஏற்றிய பெண்...

இப்படியொரு பிரச்சினை என்றதும், சம்பந்தப்பட்ட கடையின் மேலாளர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த முழு சம்பவத்தையும் அந்த நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதைத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பல்லி விவகாரம் குறித்து சரவணபவன் மீது பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்து அளித்துள்ளார். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் நடக்கும் சமையல் முறை உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி