ஆப்நகரம்

கதவை திறந்து வைதுக்கொண்டே கிளம்பிய மெட்ரோ ரயில் !!

டெல்லி :மெட்ரோ ரயிலின் கதவுகள் திறந்த நிலையில் , ரயில் இயக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 12 Sep 2017, 8:56 pm
டெல்லி :மெட்ரோ ரயிலின் கதவுகள் திறந்த நிலையில் , ரயில் இயக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil delhi metro train runs with the door open
கதவை திறந்து வைதுக்கொண்டே கிளம்பிய மெட்ரோ ரயில் !!


வடக்கு டெல்லியில் இருந்து கார்ஜன் செல்லும் மெட்ரோ ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சவ்ரி பசாரில் ரயில் நிறுத்தத்திலிருந்து கஷ்மிர் கேட் நிறுத்தம் வரை ரயிலின் ஒரு கதவு திறந்திருந்தது. இதனால் ரயில் பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது ‘’ சில தொழில் நுற்ப கோளாறுகளால் இந்த தவறு நடந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியாளர்கள் ரயிலில் இருந்தனர் என்று தெரிவித்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கிட்டோரினியில் இருந்து அர்ஜன்கிராஷ் செல்லும் ரயிலின் எல்லா கதவுகளும் பயணத்தின்போது திறந்து இருந்தது .

இந்த சம்பதிற்கு ரயில் ஓட்டுநர்தான் காரணம் என்று அவரை பணி நீக்கம் செய்தனர்.
2012 ஆம் ஆண்டு பயணி ஒருவரின் கை மெட்ரோ கதவுகளில் மாட்டிக்கொண்டது . மாட்டிக்கொண்ட கையை எடுக்க அவர் முயற்சிக்கும் முன்னரே ரயில் நகரத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

delhi metro train runs with the door open

அடுத்த செய்தி