ஆப்நகரம்

சுதந்திர தினத்தின் போது டெல்லியில் தாக்குதல் நடத்த சதி

சுதந்திர தினகத்தின் போது தலைநகா் டெல்லியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 19 Jul 2018, 4:45 pm

சுதந்திர தினகத்தின் போது தலைநகா் டெல்லியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil Delhi Red Fort


கடந்த 2016ம் ஆண்டு இந்திய ராணுவ தளவாடங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். இந்த வழக்கில் இரண்டு பயங்கரவாதிகளை மத்திய புலனாய்வு பிரிவினா் அண்மையில் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி தலைநகா் டெல்லியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதன் விளைவாக தற்போது இருந்தே தலைநகா் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பணி நிமித்தமாக டெல்லிக்குள் வருபவா்கள், வெளி மாநிலத்தவா் தீவிர சோதனைக்கு உட்படத்தப்படுகின்றனா். காவல்துறை உயா் அதிகாாிகள் தரப்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடா்ந்து டெல்லி செங்கோட்டை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அடுத்த செய்தி