ஆப்நகரம்

ஓப்போ நிறுவனத்தில் 8 ஊழியர்களுக்கு கொரோனா; நிறுவனம் மூடல்!!

டெல்லியில் இருக்கும் ஓப்போ நிறுவனத்தில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த நிறுவனம் எந்தவித காலவரம்பும் இன்றி மூடப்பட்டது.

Samayam Tamil 18 May 2020, 1:29 pm
டெல்லியில் சீனாவின் ஓப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
Samayam Tamil ஓப்போ செல்போன் நிறுவனம்


இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 8 பேருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் கால வரம்பு எதுவுமின்றி மூடப்பட்டது.

இதுகுறித்து ஓப்போ செய்தி தொடர்பாளர் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ள தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

நடப்பு மாத துவக்கத்தில்தான் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்று இருந்தோம். மொத்தம் 3000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் முடிவுகள் வரும். பரிசோதனையில் நெகடிவ் வரும் ஊழியர்கள் மட்டுமே பணிக்கு, அனைத்துவித பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து விட்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், எந்த மருத்துவமனையில் ஓப்போ ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை அந்த நிர்வாகம் வெளியிடவில்லை.

அடுத்த செய்தி