ஆப்நகரம்

டெல்லி: மருத்துவமனைகள், தெருக்களில் உறவினர்களை தேடும் மக்கள்!

டெல்லியில் கலவரம் நடந்து முடிந்த நிலையில், தங்கள் உறவினர்களைத் தேடி தெருவாகத் தேடித் திரியும் மக்கள்... தலைநகரின் அவலம், பார்ப்பவர்களைக் கண்கலங்கச் செய்கிறது...

Samayam Tamil 29 Feb 2020, 4:30 pm
அமெரிக்க அதிபர் டெல்லி வந்திருந்தபோது டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கலவரம் காரணமாக இப்போதுவரை 42பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்களிடையே சில மத வெறியர்கள்தான் வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளனர் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். டெல்லியை 3வது முறையாக ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி பிரமுகர் ஒருவர் மீது கலவரத்தில் தொடர்பிருப்பதாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.
Samayam Tamil IMG-4058-scaled


இந்த கலவரம் தொடர்பாக 6 முறை டெல்லி போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் அவர்கள் பெரிதாக மெனக்கெடவில்லை என்பது அரசு பதில்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. கலவரத்தில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டவர்களில் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்துள்ள 42 பேரில் சிலரை இப்போதும் அடையாளம் காண முடியவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே காலை வேலைக்குச் சென்ற தனது உறவினர்கள் பலர் இப்போதுவரை வீடு திரும்பவில்லை எனக் கூறி பலர் தெரு தெருவாகத் தேடித் திரிகின்றனர்.

மாநிலங்களவைத் தேர்தல்: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை

வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன, பெட்ரோல் பங்க், நூற்றுக்கணக்கான வாகனங்களும் எரிந்து சாம்பலாக்கப்பட்டன, உளவுத்துறை அதிகாரி ஒருவர் 6 மணி நேரம் சித்திரவதையாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார், என அங்கு நடக்கும் தாக்குதல்களைச் சொல்லி முடிக்க நேரம் போதாது.

இந்த கலவரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களின் பங்கு நேரடியாக இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு 330 அமைதிக் கூட்டங்களை இப்போதைய நேரத்தில் நடத்தியுள்ளது.

ராணுவத்தினரை வைத்து மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் சிலர் தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும், பிணவறை வாசலிலும் காத்துக்கிடந்து தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி