ஆப்நகரம்

பெண்களிடம் அத்துமீறிய ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது

தண்ணீர் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்திய பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டதன் பேரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ தினேஷ் மொஹனியா கைதாகியுள்ளார்.

TNN 25 Jun 2016, 2:17 pm
டெல்லி; தண்ணீர் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்திய பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டதன் பேரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ தினேஷ் மொஹனியா கைதாகியுள்ளார்.
Samayam Tamil delhi police arrests aap mla for misbehaving with women
பெண்களிடம் அத்துமீறிய ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது


டெல்லியில் சங்கம் விஹார் பக்தியில் கடந்த ஜூன் 23ஆம் தேதி தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ தினேஷ் மொஹனியா தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் மொஹனியாவை டெல்லி காவல்துறை கைது செய்தது.

“போராட்டத்தில் இருந்த பெண்களிடம் அமைச்சர் மொஹனியா தகாத வார்த்தைகளைப் பேசியதாகவும் பெண்களின் மனதைப் புண்படுத்தும் விதமாகவும் கண்ணியக்குறைவாகவும் நடந்துகொண்டதாக பதிவுசெய்யப்பட்ட புகாரின் பெயரில் அவரை கைதுசெய்துள்ளோம். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 323, 506 மற்றும் 509 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது” என்று தெற்கு டெல்லியின் கூடுதல் காவல் ஆணையாளர் நுபுர் பிரசாத் கூறினார்.

“ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சியை மட்டும் வைத்துக்கொண்டு என் மீது குற்றம் சுமத்தப்டுகிறது. பிரச்சனை நடைபெற்ற இடத்தில் நான் இருக்கவே இல்லை. என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. விசாரணைக்கு எனது ஒத்துழைப்பை முழுமையாக அளிப்பேன்” என்று அமைச்சர் மொஹனியா கூறியுள்ளார்.

Modi declares emergency in Delhi. Arresting, raiding, terrorizing, filing false cases against all those whom Delhi elected— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 25, 2016

மொஹனியா கைதானது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜிரிவால் “மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களை கைது செய்வது, அவர்கள் மீது பொய்யான வழக்கு பதிவுசெய்வது என மோடி அரசு டெல்லியில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது போன்ற நிலையை உருவாக்கியுள்ளது.” என்று கூறியுள்ளார்.

“தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த அமைச்சர் ஒருவரை இடையில் சென்று கைது செய்துள்ளனர். இதன் மூலம் மோடி அரசு மக்களுக்கு சொல்வது என்ன?” என்றும் அவர் கேட்டுள்ளார்.

அடுத்த செய்தி