ஆப்நகரம்

ஓடும் ரயிலில்.. பெண்களுடன் அமர்ந்து "சுய இன்பம்".. இளைஞரை தூக்க விரைந்தது தனிப்படை..!

டெல்லி மெட்ரோ ரயிலில் சுய இன்பம் அனுபவித்த இளைஞரை பிடிக்க டெல்லி போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 29 Apr 2023, 11:53 am
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு சுய இன்பம் அனுபவித்த நபரை பிடிக்க டெல்லி காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.
Samayam Tamil 29 delhi police


டெல்லி மெட்ரோ ரயில் நேற்று காலை வழக்கம் போல சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெட்டியில் பெண்கள் நிறைய பேர் இருந்தனர். கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெண்களின் கூட்டத்துக்கு இடையே 26 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார்.

பெண்கள் நடுவே இருந்ததால் முதலில் சற்று சங்கோஜப்பட்டு அமர்ந்திருந்த அவர், பிறகு தனது செல்போனை பார்க்க தொடங்கினார். அவர் என்ன பார்க்கிறார் என்பதை கூட்ட நெரிசலில் யாரும் கவனிக்கவில்லை. அப்போது திடீரென அவரது செல்போனில் இருந்து பெண் முனங்கும் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்டு அங்கிருந்த பெண்கள் அவரது செல்போனை பார்த்த போது, அதில் ஆபாசப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

அதே நேரத்தில், அந்த இளைஞரும் வெளிப்படையாக சுய இன்பம் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த அங்கிருந்த அலறியடித்துக் கொண்டு அவரிடம் இருந்து விலகி ஓடினர். எனினும், அதை பற்றி சிறிதும் கவலைப்படாத அந்த இளைஞர், சுய இன்பம் செய்து முடித்தார். பின்னர், அடுத்த ஸ்டாப்பில் அவர் ஹாயாக இறங்கிச் சென்றார்.

இந்த அருவருப்பான சம்பவம் குறித்து அந்தப் பெண்கள், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். இதன்பேரில், அந்த குறிப்பிட்ட ரயில் பெட்டியில் உள்ள கேமராவை ஆய்வு செய்த போது இளைஞர் செய்த மோசமான செயல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ நிர்வாகம் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தது. மேலும், டெல்லி மகளிர் ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் மற்றும் டெல்லி காவல்துறையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், கேமராவில் அந்த இளைஞரை அடையாளம் கண்ட டெல்லி காவல்துறை, அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அந்த இளைஞர் பிடிபடுவார் என போலீஸார் தெரிவித்தனர்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி