ஆப்நகரம்

டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் போராட்டம்

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக போலீசார் மற்றும் வழக்கரிஞர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது

Samayam Tamil 5 Nov 2019, 6:26 pm
டெல்லி: போலீசார் மீது வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டிக்கும் விதமாக டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil போலீசார் போராட்டம்
போலீசார் போராட்டம்


டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி வாகனம் நிறுத்துவது தொடர்பாக போலீசார் மற்றும் வழக்கரிஞர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. அந்த கலவரத்தில் 20 போலீசாரும் 8 வழக்கறிஞர்களும் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

வழக்கறிஞர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு..! டெல்லியில் பரபரப்பு..

கலவரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், வன்முறை சம்பவம் குறித்து 6 வாரத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி.கார்க்கை நியமித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், டெல்லி காவல்துறை அதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனிடையே வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் சில வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஈடுபட்டன. இந்நிலையில், போலீசார் மீது வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டிக்கும் விதமாக டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போலீசாரின் போராட்டத்தை கைவிட நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேசமயம், ஐபிஎஸ் அதிகாரிகளின் கூட்டமைப்பு போலீசாரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி