ஆப்நகரம்

கெஜ்ரிவால் வீட்டில் டெல்லி போலீஸ் சோதனை

டெல்லியில் முதன்மைச் செயலாளர் தாக்கபட்ட விவகாரம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 23 Feb 2018, 2:51 pm
டெல்லியில் முதன்மைச் செயலாளர் தாக்கபட்ட விவகாரம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Samayam Tamil delhi police search arvind kejriwals home for cctv footage
கெஜ்ரிவால் வீட்டில் டெல்லி போலீஸ் சோதனை


டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான்ன ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தின் தலைமை செயலாளராக அன்ஷு பிரகாஷ் என்பவர் பணியாற்றுகிறார்.

அரசின் விளம்பர செலவு குறித்து திங்கட்கிழமை இரவு முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்து. இதில், தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்கள் அதில் பங்கேற்றனர்.

அப்போது, அன்ஷுவுக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் அணில் பைஜாலிடம் ஐஏஎஸ் அதிகாரிகள் சில புகார் அளித்துள்ளார். அதில், பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்டுள்ள டெல்லி போலீசார் முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தில் சிசிடிவி ஆதாரங்களைத் தேடி சோதனையிட்டனர். பொதுப்பணித்துறையிடம் முதல்வர் வீட்டு சிசிடிவி பதிவுகளைக் கேட்டபோது அவர்கள் தர மறுத்துவிட்டதால் நேரில் வந்து சோதனையிடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி