ஐந்து பைசாவை கணக்கில் காட்டாததால் வேலை பறிக்கப்பட்ட பேருந்து நடத்துனர் ஒருவர்,தனக்கான பணப்பலனை பெறுவதற்காக 41 ஆண்டுகளாக நீதிமன்ற படியேறி வருகிறார்.
டெல்லியைச் சேர்ந்த ரன்வீர் சிங் யாதவ் என்பவர், டெல்லி போக்குவரத்தில் கழகத்தில் நடத்துனராக பணியாற்றியவர்.கடந்த 1973-ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் 15 பைசா வாங்கிவிட்டு,அவருக்கு பத்து பைசாவுக்கு மட்டும் டிக்கெட் வழங்கிய ரன்வீர் சிங்,ஐந்து பைசாவை தனக்காக ஒதுக்கிக் கொண்டார்.அப்போது அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ரன்வீர் சென்ற பேருந்தை நிறுத்திய பரிசோதகர்கள்,அவரை சோதனை செய்தனர்.அப்போது கணக்கில் வராத ஐந்து பைசாவை அவர் சட்டவிரோதமாக வைத்திருந்ததால்,அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரன்வீர் சிங்,1990-ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவான தீர்ப்பை பெற்றார்.ஆனால் டெல்லி போக்குவரத்துக் கழகம் விடுவதாய் இல்லை.கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து,டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இறுதியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு ரன்வீர் சிங்கிற்கு ஆறு லட்ச ரூபாய் தரவேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
ஆனாலும் ரன்வீன்சிங் மகிழ்ச்சியாக இல்லை.உயர்நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கூறி டெல்லி போக்குவரத்து கழகம் மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இதனால் வெறும் ஐந்து பைசாவுக்காக 41 வருடங்களாக இழுத்தடிக்கப்படும் தன் நிலைமையை எண்ணி நொந்து போயுள்ளார் ரன்வீர் சிங்.
டெல்லியைச் சேர்ந்த ரன்வீர் சிங் யாதவ் என்பவர், டெல்லி போக்குவரத்தில் கழகத்தில் நடத்துனராக பணியாற்றியவர்.கடந்த 1973-ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் 15 பைசா வாங்கிவிட்டு,அவருக்கு பத்து பைசாவுக்கு மட்டும் டிக்கெட் வழங்கிய ரன்வீர் சிங்,ஐந்து பைசாவை தனக்காக ஒதுக்கிக் கொண்டார்.அப்போது அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ரன்வீர் சென்ற பேருந்தை நிறுத்திய பரிசோதகர்கள்,அவரை சோதனை செய்தனர்.அப்போது கணக்கில் வராத ஐந்து பைசாவை அவர் சட்டவிரோதமாக வைத்திருந்ததால்,அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரன்வீர் சிங்,1990-ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவான தீர்ப்பை பெற்றார்.ஆனால் டெல்லி போக்குவரத்துக் கழகம் விடுவதாய் இல்லை.கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து,டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இறுதியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு ரன்வீர் சிங்கிற்கு ஆறு லட்ச ரூபாய் தரவேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
ஆனாலும் ரன்வீன்சிங் மகிழ்ச்சியாக இல்லை.உயர்நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கூறி டெல்லி போக்குவரத்து கழகம் மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இதனால் வெறும் ஐந்து பைசாவுக்காக 41 வருடங்களாக இழுத்தடிக்கப்படும் தன் நிலைமையை எண்ணி நொந்து போயுள்ளார் ரன்வீர் சிங்.